டிசம்பர் 2014
இந்த இதழில் தமிழர்களின் காவல் தெய்வங்கள், கிராமத் தேவர் தேவதை வழிபாடுகளை எப்படி இந்த நாட்டிற்கு வந்த அன்னியர்கள் கைவிட வைத்தார்கள் என்பது பற்றிய விளக்கங்கள் உள்ளன.
1. சிறு தெய்வங்கள் விளக்கம்,
2. சீர்திருத்தப் போக்கும் இந்துமதமும்
3. இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களுக்கு கண்டிப்பு, திருத்தம்
4. திருத்தக் கருத்துக் கட்டுரை வெளியிட வேண்டும் திருமடல்.
5. பிறாமண தாசர்களால் கொலை செய்யப் படும் தமிழ்ச் சொற்கள்.
6. இந்து மதமும் பிறாணர்களின் மதமும் - தனிப்பெரும் விளக்கம்.
7. சோதி என்பது தமிழ்ச் சொல்தான்.
8. மார்கழி மாதம் பீடுடைய மாதமே!
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.