நம் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்காகத் தம் உயிரையும் விடத் தயாராக இருப்பவர்கள் அனைத்து உலக மொழிவழி நாடுகளிலேயே தமிழ்நாடு ஒன்றில்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழுக்காக உண்மையாக உழைக்கத் தயாராய் இருப்பவர்கள் என்றுதான் பொருள். தமிழுக்காக உழைப்பது என்பது என்ன எனத் தெரியாமல்தான் இன்றைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் தரும் வண்ணம் குருதேவர் எழுதிய கட்டுரையே இந்த மாத இதழில் முதன்மை பெறுகின்றது.
இவ்விதழில் உள்ள கட்டுரைகள்:
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.