இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள் > தமிழுக்கு என்ன செய்யவேண்டும்?
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

தமிழுக்கு என்ன செய்யவேண்டும்?

தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படியெப்படிச் செய்ய வேண்டும்? எவ்வப்போது செய்ய வேண்டும்?

நம் தாய்மொழியாகிய தமிழ்மொழிக்காகத் தம் உயிரையும் விடத் தயாராக இருப்பவர்கள் அனைத்து உலக மொழிவழி நாடுகளிலேயே தமிழ்நாடு ஒன்றில்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழுக்காக உண்மையாக உழைக்கத் தயாராய் இருப்பவர்கள் என்றுதான் பொருள். தமிழுக்காக உழைப்பது என்பது என்ன எனத் தெரியாமல்தான் இன்றைய தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் தரும் வண்ணம் குருதேவர் எழுதிய கட்டுரையே இந்த மாத இதழில் முதன்மை பெறுகின்றது.

இவ்விதழில் உள்ள கட்டுரைகள்:

  1. சத்தி அண்டத்திலிருந்து தேவதேவி இம்மண்ணுலகு வருதல் பற்றிய குறிப்பு.
  2. தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் குருதேவர் எழுதிய கட்டுரையின் முன்னுரை.
  3. காரணோடைக்கு அருகில் உள்ள எருமைவெட்டி பாளையத்திற்கு சென்ற அருட்பயணம் பற்றிய கட்டுரை.
  4. பட்டாள வீரனுக்குப் பரிந்துரை மடல் என்ற தலைப்பில் தமிழுக்காக உழைப்பவர்கள் செய்ய வேண்டுவது என்ன என்பதை விளக்கும் கட்டுரை.
  5. நலம் பாராட்டுத் திருவோலையாக இந்து முன்னணியில் இருந்த தொடர்பாளர் ஒருவருக்காக குருதேவர் எழுதிய அஞ்சல்.
  6. இந்தியத் திருநாட்டில் அரசியல், சமுதாய, சமயத் தலைவர்களின் நெடிய தொலைநோக்குப் பார்வையற்ற செயல்களை விவரித்து குருதேவர் எழுதிய கருத்துக்கள்.
  7. அதர்வான வேதம் காண்டம் 1, மண்டலம் 8இல் உள்ள நாள்வாக்கிய மலர்கள் 21 முதல் 48 வரை.

 

மேலும் விரிவாகப் படித்திட.... >>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |