இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > அரசியல்துறையின் வழிகாட்டி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அரசியல்துறையின் வழிகாட்டி

"இந்தியாவின் அரசியல்துறைக்கு இந்து மறுமலர்ச்சி இயக்கம்தான் வழிகாட்டியாக இருந்திடும்!"
- கார்த்திகை 43,73,124.
  1. இந்தியத் திருநாட்டின் அரசியல் துறைக்கு இந்து மறுமலர்ச்சி இயக்கம்தான் வழிகாட்டியாக அமைந்திடும். பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தியர்கள் இன்றைக்கு தங்களுக்கென்று தெளிவான அரசியல்துறை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையே நீடிக்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கொள்கைகளும், சித்தாந்தங்களும் சித்தர் நெறியின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவை என்பதனால், முதலில் தமிழகத்தையும், பின்பு தென்னிந்தியாவையும், பின்னர் இந்தியாவையும், முடிவாக உலகையே வழிநடத்தவும் பயன்படும் என்பதனை வலியுறுத்தி எழுதப்பட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை இது.
  2. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவியில் சித்தர்கள் தரும் அருட்செல்வங்களையும், அருள் நிதிகளையும் குருதேவரிடம் அருட்கொடையாகவே பெற்று உயருங்கள் என்று அழைப்பு விடுத்து குருதேவர் தமது அறிமுகத்தார் ஒருவருக்கு எழுதிய அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  3. அருள் சார்ந்த எந்தச் செயலும் பயனைத் தரும்; அருள் சாராத எந்தச் செயலும் இருளைத்தான் தரும் என்ற கருத்தின் அடிப்படையில், இ.ம.இ.க்காக அருள் சார்ந்த நிறுவனங்களையும், நிருவாகக் கட்டமைப்புக்களையும் உருவாக்குங்கள் என்று கட்டளையிட்டு தமது அடியானுக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் அடுத்து உள்ளது.
  4. இ.ம.இ.யின் செயல்திட்டம் என்ன என்பதை சுருக்கமாக அருட்சேனைத் தளபதிக்கு குருதேவர் எழுதிய அஞ்சலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி அடுத்து உள்ளது.
  5. இந்துவேதத்தையும், இந்துவேத மதமான இந்துமதத்தையுமே அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தமிழனும் இயங்க வேண்டும் என்று வலியுறுத்திய வாசகம் இறுதிப் பக்கத்தில் உள்ளது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

Last edited: January 07, 2024, 11:44
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |