இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > பதினெண்சித்தர்மடம் பயிற்சிமுகாம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

பதினெண்சித்தர்மடம் பயிற்சிமுகாம்

பதினெண்சித்தர் மடம் பயிற்சி முகம் (முகாம்)

    1. பதினெண்சித்தர் மடம் நிகழ்த்தும் பயிற்சி முகம் (முகம் என்பதே நீட்டல் விகாரம் பெற்று முகாம் என்று ஆயிற்று) பற்றி குருதேவர் அவர்கள் வழங்கிய அறிவிப்புக் கட்டுரை இந்த இதழில் முதன்மையாக உள்ளது. மெய்யான இந்துமதத்திற்கான அடிப்படையான இந்துவேதத்தைப் பாதுகாத்து மக்களுக்கு வழங்கும் மடமான பதினெண்சித்தர் மடம் தனது பயிறிசிகளை வழங்கும் முகமாக நடத்தப்படும் பயிற்சி முகம் பற்றிய கருத்து விளக்கக் கட்டுரை இது.

    2. பதினெண்சித்தர் மடம் பீடம் நடத்தும் பயிற்சிப் பள்ளியின் குறிக்கோள், செயல் தத்துவம் ஆகியன பற்றி குருதேவர் அவர்கள் குறிப்பிட்டு மும்முனைப் போர்த் தத்துவ விளக்கத்தினை விரிவாகக் கூறும் கட்டுரை அடுத்ததாக உள்ளது.

    3. இறுதிப் பக்கத்தில் 'இந்துவேத விடுதலை முழக்கம்' எப்படி இந்தியாவின் விடுதலை முழக்கமாக 19ஆம் நூற்றாண்டில் மாறியது? என்பதை விளக்கும் சிறிய குறிப்பு உள்ளது.

இந்த இதழினை விரிவாகப் படித்திட இங்கே தொடரவும் --->>>

 

Last edited: August 12, 2023, 19:36
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |