இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > மக்கள் தொண்டு எது?
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மக்கள் தொண்டு எது?

அருள்வழங்கி மக்களின் பாதிப்புக்களைப் போக்குதலே மக்கள் தொண்டு.

43,73,124ஆம் ஆண்டு மாசி மாத வெளியீடு

  1. இந்த இதழின் முதல் கட்டுரையாக வெண்ணந்தூரைச் சேர்ந்த புதிய அறிமுகத்தார் ஒருவருக்கு குருதேவர் எழுதிய விரிவான அஞ்சல். அருட்கோட்டங்களை நாடெங்கும் அமைத்தும், பகுத்தறிவுப் பூர்வமான சித்தர்நெறியை பரப்பிட மாணாக்கர்களைத் தயாரித்துச் செயல்படச் செய்தும் அருட்படை வீரர்களைத் தயாராக்கும் திட்டத்தை இந்த அஞ்சலில் விவரித்துள்ளார் குருதேவர்.
  2. அடுத்ததாக சித்த மருத்துவம் படித்து புள்ளம்பாடி எனும் ஊரில் மருத்துவராகப் பணிபுரியும் ஒருவருக்கு பதினெண்சித்தர்களுடைய பதினெட்டு வகையான வாசகங்களை வழங்கி அருட்பணி ஆற்றிட ஒப்புதல்களை குருதேவர் வழங்கிடும் அஞ்சல் உள்ளது.
  3. மூன்றாவதாக விரகாலூரைச் சேர்ந்த ஒருவருக்கு குருதேவரின் முதன்மை பற்றியும், குருவில்லாமல் அருள்நிலைகளைப் பெற முடியாது என்பதையும் ... விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் உள்ளது.
  4. நான்காவதாக உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை மக்கள் தொண்டு என்பது எது என்பதனை விளக்குகின்றது. அதாவது மக்கள் தொண்டு என்பதே மக்களுக்கு பொருள் வழங்கிடுவதை விட அருள் வழங்கி அவர்களின் அனைத்து வகையான பாதிப்புக்களையும் போக்குவதுதான் என்றும் அந்த மக்கள் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு என்றும் விளக்கிடுகின்ற கட்டுரை இது.
  5. அடுத்ததாக இந்துவேதம் பற்றிய சில அரிய கருத்துக்கள் - ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது - வழங்கப்பட்டுள்ளது.
  6. இறுதிப் பக்கத்தில் இந்து வேத முழக்கங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட --->>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |