இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > மாபெரும் அரசியல் இயக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மாபெரும் அரசியல் இயக்கம்

மாபெரும் அரசியல் இயக்கமாக இ.ம.இ.தான் வளரமுடியும்.
  1. "இந்துவேத மாநாடு குறித்த சிறு விளக்கம்": தஞ்சையில் 1991இல் நடை பெற்ற இந்து வேத மாநாட்டினைப் பற்றி குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கிய முன்னோட்டக் கருத்து விளக்கக் கட்டுரை இந்த இதழில் முதலாவதாக உள்ளது.
  2. "மாபெரும் அரசியல் இயக்கமாக இந்து மறுமலர்ச்சி இயக்கம்தான் வளர முடியும்" - இந்துவேத மாநாட்டிற்குப் பின் 1991இல் குருதேவர் கோவை மாவட்ட சித்தரடியான் ஒருவருக்கு எழுதிய மடலின் நகல் அடுத்ததாக உள்ளது. இதிலேயே இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) மட்டுமே இந்த நாட்டில் ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாக வளரமுடியும் என்பதனை விவரித்து அதற்காக செயல்பட வேண்டிய விதங்களை விளக்கியுள்ளார்.
  3. "கோவை மாவட்ட இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அமைப்பு": கோவை மாவட்டத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தினை வளர்க்க வேண்டிய விதங்களை விவரித்து குருதேவர் எழுதிய அஞல் வடிவக் கட்டுரை மூன்றாவதாக உள்ளது.
  4. "இந்துவேதம் அறிக்கை" - இந்துவேதம் பற்றிய விரிவான அறிக்கை இறுதியாக உள்ளது.

இந்த இதழினை முழுமையாக PDF வடிவில் படிக்க இங்கே தொடரவும் ---->>>>

 

 

Last edited: January 07, 2024, 11:09
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |