இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > இ.மு.க. கொள்கை விளக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இ.மு.க. கொள்கை விளக்கம்

இ.ம.இ. - இ.மு.க. கொள்கை விளக்கம்
  1. இந்து மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ.) தனி மனிதர்களையும், குடும்பங்களையும் சிறந்த அருளாளர்களாக, இந்துமதச் செயல்வீரர்களாக, இந்துமதத் தொண்டர்களாக, ... தயாரிக்கும் பணியைச் செய்கின்றது. இந்து முன்னேற்றக் கழகம் (இ.மு.க.) சமுதாயத் துறைக்காகவும், அரசியல் துறைக்காகவும் தோற்றுவிக்கப் பட்டிருக்கிறது. இ.ம.இ.யின் கடுமையான சட்டதிட்டக் கட்டுப்பாடுகளையெல்லாம் சற்று தளர்த்தி இ.மு.க. செயல்வீரர்களைத் தயாரிக்கின்றது. இந்த விளக்கங்களை விரித்துரைக்கும் கட்டுரை அஞ்சலே இந்த இதழில் முதலாவதாக உள்ளது.
  2. அருளாளர்களையும் அருட்குடும்பங்களையும் ஊர் தோறும் தோற்றுவிப்பதற்காகவே சித்தர் கருவூறார் வாரவழிபாட்டு மன்றங்களையும், சித்தர் கருவூறார் அருட்கோட்டங்களையும், சித்தர் கருவூறார் அருட்பணி விரிவாக்கத் திட்ட மையங்களையும் குருதேவர் அமைத்து செயல்படுத்தி வருகின்றார். இதனை விளக்கி எழுதப்பட்ட அஞ்சலே அடுத்து உள்ளது.
  3. "இந்துக் கோயில்கள் இங்கே? இவற்றிற்குரிய இந்து வேதம் எங்கே?" என்ற கேள்வியை எழுப்பி மக்களைச் சிந்திக்கச் செய்யும் கட்டுரை அடுத்ததாக உள்ளது. இந்தக் கட்டுரை மாசிமகமும் இந்துவேதமும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி.
  4. அடுத்ததாக 'இந்து முன்னேற்றக் கழகத்தின் அறிவிக்கை எண் 8889' பின் அட்டையின் உள் பக்கத்தில் உள்ளது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட ===>>>

 

 

Last edited: June 14, 2024, 12:54
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |