அன்புச் சேவுக! - 'அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா?
தமிழினத் தாழ்ச்சி நிலை தொடர்ச்சி நிலையாவது ஏன்? என்ற தலைப்பில் உள்ள புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.
1. பிறாமணர் எனும் வட ஆரியரின் ஊடுருவலால் தமிழர் வீழ்ச்சி.
2. ஆரிய மாயையால் அன்னியர்களே தமிழரின் வழிகாட்டிகள் ஆனார்கள்.
3. தமிழினத் தலைவர்களின் தோல்வி.
4. சமயத்துக்கும் சமுதாயத்துக்கும் போர்! போர்! போர்!
5. தமிழர்களின் அரசியல் நிலையின் கேவலங்கள்.
6. அரசியல் மோசடிகளை வெல்லக் கூடிய தத்துவத் தலைமை தேவை.
7. தமிழினத் தாழ்ச்சியைப் போக்கக் கூடியது சமுதாய உணர்ச்சியா? அரசியல் உணர்ச்சியா?
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.