ஆடி மாதம் (July - 2017)
அன்புச் சேவுக! - தொகுப்பு 3
சென்ற இதழ் போலவே இந்த இதழிலும் 'அன்புச் சேவுக!' என்ற தலைப்பில் குருதேவர் அவர்கள் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரைகள் உள்ளன. இவை "குருதேவர்" அறிக்கை 29 முதல் 37 வரையுள்ள அறிக்கைகளில் வெளியானவை.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளின் தலைப்புக்கள்:
1. அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் சாதனை!
2. நமது வளவளர்ச்சியும், செயல்நிலையும்.
3. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்.
4. நமது இயக்கத்தின் தத்துவ வலிமை.
5. நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா? இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே!
6. இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.