இந்துவேதம் இந்துமதம் பிழைக்க! தழைக்க!! உழைக்க!!! அழைக்கிறோம்! வாரீர்! என்ற தலைப்பில் தமிழர்களின் மறு சிந்தனைக்காக 1991இல் குருதேவரால் எழுதப்பட்ட நெடிய கட்டுரையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பப் பகுதி இந்த இதழில் முழுமையாக உள்ளது. இதில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்பது என்ன என்பது பற்றியும், இந்த இயக்கத்தின் அவசியம் பற்றியும், இந்த இயக்கத்தினால் தனிமனிதர்க்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும், உலகத்திற்கும் ஏற்படப் போகின்ற நன்மைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து வழங்கப்பட்ட விளக்கங்கள் உள்ளன.
இறுதிப் பக்கத்தில் 'குருபாரம்பரிய அறிவுரை' என்ற தலைப்பில் குருபாரம்பரிய ஏடு வழங்கும் கருத்துரை உள்ளது.
இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.