சூலை 2013
உள்ளுறை
1. சித்தர்கள் வரலாறும், இந்து மறுமலர்ச்சி இயக்கமும்.
2. இந்துமத மறுமலர்ச்சியே இந்தியாவின் செழுச்சி - முன்னுரை.
3. இந்து மறுமலர்ச்சி இயக்க விளக்கச் சுருக்கம்
4. இந்து மறுமலர்ச்சி இயக்க வீர முழக்கங்கள்.
5. அரச பாரம்பரியம் - சித்தர்கள் தரும் வரலாற்றுச் செய்திகள்
6. இயக்க வளர்ச்சி நிலை - குருதேவர் தரும் விளக்கம்.
7. இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட ...
8. குருதேவரின் 49வது ஆண்டுப் பிறந்த நாள் செய்தி.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.