ஆகசுட்டு 2014
தமிழரின் சிந்தனையைத் தேடி 11வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகவும், 11வது ஞானாச்சாரியாராகவும் தோன்றிச் செயல்பட்டு பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்திட்ட சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வரலாற்றுச் சுருக்கம் இந்த மாதம் தரப்படுகின்றது.
தஞ்சைப் பெரிய கோயில் கோபுரத்தின் பின்புறம் வன்னி மரத்தடியில் இவரின் நிலவறை உள்ளது.
நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும்.
PDF கோப்பாகப் பெற்றிட இங்கே அழுத்தவும்.
பின்குறிப்பு:- 14/9/2014க்கு முன் இங்கே வந்து படித்தவர்கள் கவனத்திற்காக:
இந்த இதழின் 15ஆம் பக்கத்தில் தீரன் உக ஆண்டுக் கணக்கு 12,96,000 ஆண்டுகள் என தவறுதலாக இருந்தது. தீரன் உக ஆண்டுக் கணக்கு 12,90,000 ஆண்டுகள் என திருத்திப் படிக்கவும்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.