உள்ளுறையும் கட்டுரைகள் விவரம்:
“தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்” - 3/4/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் குருவாணை பெற்று திருவருட்செல்வர் திரு ABT மகாலிங்கம் அவர்களின் மடலுக்கு எழுதிய பதில் மடல்.
“கலியுக ஆன்மீக ஆசானுக்கு தரப்படும் அறிவுரை” - 10/5/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் துறையூரில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்கு விடுத்த விளக்க மடல்.
“அருளுலகச் சர்வாதிகாரம் அமைத்தே தீருவோம்” - 13/6/1985இல் பிறமாச்சாரியார் திரு சி.கவிக்குமார் அவர்கள் திருச்சிராப்பள்ளி வேல்முருகன் ஆசிரமத்தைச் சேர்ந்த திரு P.சீனிவாசன் அவர்களுக்கு வரைந்த பதில் மடல்.
“அருளாட்சிப் பணி இருளகற்றும் கண்டிப்புக் குருவாணைத் திருவோலை” - 12/2/1985இல் குருதேவர் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடியான்கள் அனைவருக்கும் எழுதிய அஞ்சல்.
“அருளாட்சி அமைப்பு அழைப்பு அறிவிப்பு” - 1986இல் காரைக்குடிச் சுற்றுப்பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல்.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>
இந்தக் கட்டுரைகளை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.