2015 - சனவரி
இந்த இதழில் தமிழர்களின் இந்து மத இந்தியாவாகிய இத் திரு நாட்டிற்குள் வந்த அன்னியர்கள், அதாவது பிறமண்ணினர்கள், அதாவது பிறாமணர்கள் சாதி என்ற புதிய முறையை வஞ்சகமாக உண்டாக்கி ஏமாற்றிய விதங்கள் விளக்கப் படுகின்றன.
1. சித்தர் நெறியும் சாதி இன மொழி வெறிகளும்.
2. மெய்யான இந்துமதத்தில் சாதி வேற்றுமைகளே கிடையாது.
3. சாதிகளை ஒழித்தேயாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை.
4. அருணகிரியார் வரலாற்றில் பொய்யான ஹிந்துமதத்தின் ஆபாசக் கற்பனை.
நேரடியாக PDF கோப்பாகப் படித்திடலாம்.
அல்லது imagesஆக இங்கே படிக்கவும்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.