2015 - பிப்ரவரி
43,73,116ஆம் ஆண்டு மாசி மாத வெளியீட்டில் தமிழர்களின் அமாவாசை விரதம் என்பது இந்த நாட்டிற்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வந்த அன்னியர்களால் எப்படி எல்லாம் தடுத்துக் கெடுக்கப் பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இடம் பெறுகின்றது.
1. அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும்.
2. உண்மையான இந்துமத உயர்ச்சிக்காக வட ஆரிய வேதநெறிக்குக் கண்டிப்பு.
3. அருளுலக இருளகற்றும் அறிவிக்கை.
4. சிவராத்திரி பற்றி இந்துவேதம் கூறும் செய்திகள்.
நேரடியாகப் PDF வடிவில் படித்திட ...
பக்கங்களை படங்கள் வடிவில் படித்திட ....
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.