2015 - சூலை
தொழுகை முறை தமிழர்களுடைய மதமான மெய்யான இந்துமதத்திற்கே உரியது. அதற்கான குருபாரம்பரிய விளக்கங்கள் இந்த இதழின் சிறப்பான கட்டுரையில் உள்ளன.
கடவுளர்களில் ஆண்கடவுள் என்றால் தாடி மீசை இல்லாதவர்களாகவே ஓவியங்களில் காட்டப் படுகின்றன. இது தவறானது என்பதை விளக்கும் கட்டுரையும், தமிழ் எழுத்தின் வரி வடிவங்களில் புதிய மாற்றங்களைக் கொணர்வது தவறு என்று விளக்கும் கட்டுரையும் உள்ளன.
ஒன்பது கோள் நாயகனாகிய சனீசுவரரை வழிபடும் விதமும் பூசைமொழிகளும் வழங்கப் பட்டுள்ளன.
திராவிடக் கழகம் என்பது கடவுளை மறுக்கும் இயக்கம் என்பது தவறானது என்பது ஒரு கட்டுரையில் விளக்கப் படுகின்றது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.