இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2016 வெளியீடுகள் > குரு பத்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

குரு பத்தி

வைகாசி மாதம் (June)

"குருபத்தியே சித்திக்கு வழி"

  இந்த இதழில் திருமந்திற ஓலைநாயகத்தின் அறிவிப்பாக குருவை நாடித் தேடிப் பெற்ற பின் குருவின் மூலமாக அருளீட்டும் முயற்சியில் இருக்கும் அடியான், அடியாள், அடியார் எனப்படுவோர் எப்படி எப்படி எல்லாம் தங்களையும், தங்களின் செயல்நிலைகளையும் காத்து வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் உள்ள கட்டுரை முதலில் உள்ளது.

  அடுத்ததாக 'மத வழிப் புரட்சி' என்பதை எப்படிச் செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத் தேவையான பின்னணி ஆய்வுகளை நிகழ்த்தி சத்தி அண்டத்துத் தேவதேவி வழங்கிய பரிந்துரைகளைத் தாங்கிய கட்டுரை உள்ளது.

 மூன்றாவதாக 'பேரின்பம்' என்பது உண்மையில் எது என்பதை விளக்கும் சிறிய குறிப்புரை உள்ளது.

 

இந்த இதழினை PDF கோப்பாகப் படித்திடலாம்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |