இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2016 வெளியீடுகள் > பதினெண்சித்தர்களின் இந்துமதம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

பதினெண்சித்தர்களின் இந்துமதம்

ஆவணி மாதம் (Sept)

பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதத்தை உலகுக்கு அறிமுகப் படுத்துவதே எமது நோக்கம்.

  குருதேவர், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் திருவோலக்கத்திலும் நாளோலக்கத்திலும் செயல்படும் போது தமது நோக்கமாகக் கொண்டதை விரிவாக விளக்கி உள்ளார் இந்தக் கட்டுரையில். இதுவே முதல் கட்டுரையாக இந்த வெளியீட்டில் உள்ளது.

இந்த இதழில் உள்ள பிற கட்டுரைகள்:

  • சித்தர் நெறியின் புரட்சிப் பூசாவிதிகள்.
  • பிச்சாடனர் சிலை பற்றிய குருபாரம்பரிய விளக்கம்.
  • குருதேவரின் அருளார்ந்த அறிவுரையின் ஒரு பகுதி.
  • யார் பெரியார்? யாருக்குப் பெரியார்? - இந்தத் தலைப்பில் எழுதப் பட்டுள்ள நூலின் ஒரு சிறு பகுதி.
  • தமிழர்களின் பூணூல் அணியும் முறை பற்றிய குருபாரம்பரியச் செய்திகள்.
  • விவேகானந்தரைப் பற்றிய ஒரு துல்லியமான ஆய்வு.
  • குருபூசை விழா.
  • இறைச்சியும் இறைமையும் - குருபாரம்பரிய விளக்கம்.

 

இந்த இதழினை PDF கோப்பாகப் படிக்கலாம்.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |