கார்த்திகை மாதம் (Dec)
பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் அருளிய திருவாசகம் இந்த இதழில் வழங்கப் படுகின்றது. இந்தத் திருவாசகத்தில் சமயக் குரவர் நால்வரில் சிறு வயதிலிருந்தே செயல்பட்டிட்ட திருஞானசம்பந்தர் அவர்கள் சமணோரோடு நிகழ்த்திட்ட அனல் புனல் வாதத்தினை விரிவாக பாடல் வரிகளாக விளக்கிடுகின்றார். இந்த நிகழ்வு நிகழ்ந்ததற்கான சான்றுகள் இன்றும் கூட இருக்கின்றன.
இந்தக் கட்டுரையோடு குருவாசகம் என்ற தலைப்பில் 1982இல் அச்சிட்ட அறிவிக்கையும், 10வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவ்ர்கள் வழங்கிய குருபாரம்பரிய வாசகமும், அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்கு வழங்கிய அறிமுகக் கடிதமும் வழங்கப் பட்டுள்ளன.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.