இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள் > இ.ம.இ.-அ.வி.தி. கொள்கை விளக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இ.ம.இ.-அ.வி.தி. கொள்கை விளக்கம்

இந்து மறுமலர்ச்சி இயக்கம் - அருட்பணி விரிவாக்கத் திட்டம் இவையிரண்டின் கொள்கை விளக்கம்
  1. இந்த இதழில் முதலாவதாக இந்து மறுமலர்ச்சி இயக்கமும் அருட்பணி விரிவாக்கத் திட்டமும் இரண்டு நிறுவனங்களாகச் செயல்படும் விதம் பற்றி விவரித்து குருதேவர் அவர்கள் எழுதிய கட்டுரை முதலாவதாக உள்ளது. இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் செயல்படுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்பட விரும்புபவர்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  2. இரண்டாவதாக உள்ள கட்டுரையில் வழிபடு நிலையங்களிலும், தனியார் இடங்களிலும் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுபவர்கள் பின்பற்ற வேண்டிய செயல்திட்டங்களை விவரித்து எழுதப்பட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை உள்ளது.
  3. மூன்றாவதாக உள்ள கட்டுரையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் செயல்படுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும், அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் செயல்பட விரும்புபவர்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  4. இறுதியில் குருதேவர் தமது மாணாக்கர் ஒருவரை தம்மோடு இணைந்து இந்து மறுமலர்ச்சி இயக்கத்தில் செயல்பட ஊக்கம் தந்து வரைந்த மடல் உள்ளது.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |