இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள் > யக்ஞ போர்ப்பாசறை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

யக்ஞ போர்ப்பாசறை

யக்ஞ போர்ப்பாசறை துவக்கம் பெறுதல்

 கோவை மாவட்டச் சிறுமுகையில் குருதேவர் அவர்கள் செய்த யக்ஞத்தின் மூலம் 'நிறையக்ஞர்' எனும் அருட்பட்டம் பெற்று யக்ஞ போர்ப் பாசறையை துவக்கினார். அதை அடிப்படையாகக் கொண்டு குருதேவர் அவர்கள் எழுதிய கட்டுரையினால் இந்த இதழின் தலைப்பு அமைகின்றது.

இந்த இதழில் உள்ள கட்டுரைகள்:

  1. தஞ்சப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் குருதேவருக்கு அருளிய அருளார்ந்த அறிவுரை.
  2. இ.ம.இ. - அ.வி.தி. ஆகிய நிறுவனங்களுக்கான கட்டமைப்பு அமைக்கப் பட வேண்டிய விதத்தை விளக்கும் கட்டுரை.
  3. தமிழ்நாட்டின் உரிமையையும், இந்தியாவின் பெருமையையும் நிலைநாட்டும் இயக்கம் இ.ம.இ.தான் என்று குருதேவர் விளக்கும் அஞ்சல்.
  4. குருதேவரை உணர்வது எப்படி என்பதை விளக்கியும், ஆயுதப் புரட்சி இல்லாமல் காகிதப் புரட்சியே நம் காலத்திய தேவை என்பதைக் கூறியும் குருதேவர் எழுதிய அஞ்சல்.
  5. யக்ஞ ஆதுலர் சாலையின் தோற்றம் பற்றி குருதேவர் விளக்கிய அருளிய அஞ்சல்.
  6. மெய்ஞ்ஞானக் கொடி ஒருவரின் வீட்டில் ஏற்றிக் கொண்டால் கிடைக்கும் பயன் என்ன என்பதை விளக்கி எழுதிய அஞ்சல்.
  7. குருதேவர் தம் காலத்தில் எடுத்த முயற்சி பற்றிய ஒரு சிறு குறிப்பு.

மேலும் விரிவாகப் படித்திட ...>>>

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |