இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள் > திருந்தாதவர்களுக்காகப் பரிந்துரை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

திருந்தாதவர்களுக்காகப் பரிந்துரை

திருந்தாதவர்களும் திருத்தம் பெறுவதற்காகத் தேவதேவியின் பரிந்துரை
  1. அருட்படை வீரர்கள் ஒற்றுமையோடு, ஒன்றுபட்டு செயல்பட்டு வெற்றி பெறுவதற்காக சத்தி அண்டத்துத் தேவதேவி வழங்கிடும் பரிந்துரைகளை பன்னிரண்டு வினாக்கள் எழுப்பி குருதேவர் வழங்கும் அறிவுரைகளைக் கொண்ட சுருக்க விளக்கக் கட்டுரை முதலாவதாக உள்ளது.
  2. சித்தர்நெறிப் பூசைகளில் கொடுக்கப்படும் குருதிப் பலி பற்றியும், இறைச்சி உணவு படையல் பற்றியும் குருதேவர் வழங்கிடும் விளக்கக் குறிப்பு அடுத்ததாக உள்ளது.
  3. மதுரைச் சித்தரடியான் ஒருவருக்கு சுடலை அருட்கோட்டப் பூசைகளில் வரும் பேயாளிகளுக்கும், நோயாளிகளுக்கும், பிற பிணியாளர்களுக்கும் வழங்க வேண்டிய பரிகார முறைகளை வழங்குவதுடன் ஞானக்காட்சி என்ற சித்திநிலையை குருவழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விரிவான விளக்கங்களையும் குருதேவர் வழங்கிடும் செயல்விளக்கத் திருவோலை மூன்றாவதாக உள்ளது.
  4. அடுத்து உள்ள இரு கட்டுரைகளும் சேலம் மாவட்டத்தார்களுக்காக சேலம் வேம்படிதாளம் என்ற ஊரில் அமைந்துள்ள தருகுலத்தின் முக்கியத்துவம் பற்றியும் குருதேவர் வரைந்தவை. இந்தக் கட்டுரைகளில் பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் மிக உயர்ந்த நிலையை விளக்கியும், இந்தப் பீடாதிபதிகள் குருதேவராகச் செயல்படும் விதங்களைப் பற்றியும் குருதேவர் தரும் அரிய கருத்துக்கள் உள்ளன. குருதேவர் தமது மாணாக்கர்களை எவ்விதம் தயாரிக்கின்றார் என்பதையும் இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
  5. இறுதியாக குருபாரம்பரிய மாணாக்க இலக்கண விதிகளும், குருவழிச் செயல்பட வேண்டியதின் அவசியமும் விளக்கிடும் வாசகங்கள் உள்ளன.

 இந்த இதழினை PDF கோப்பாகப் படித்திட -->>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |