தை மாதம், 43,73,125ஆம் ஆண்டு.
1. இந்து வேதம் ஒரு பெரிய ஆலமரம். இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற மற்ற மதங்கள் அனைத்தும் இந்த பெரிய ஆலமரத்தின் இலைகளாக, கிளைகளாக, விழுதுகளாகத்தான் தோன்றின, தோன்றியிருக்கின்றன, தோன்றப் போகின்றன. எனவே, இந்துவேத மதமான இந்துமதத்திற்கு மற்ற எந்த மதத்தின் மீதும் வெறுப்போ, பகையோ, எதிர்ப்போ, மறுப்போ கிடையாது! கிடையாது!! கிடையாது!!! அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் அருளிய இந்துவேத மதக் கருத்துக்கள் அடங்கிய கட்டுரை இந்த இதழில் முதலில் உள்ளது.
2. கரூர்ப் பசுபதீசுவரர் கோயிலை விரிவாக்கிக் கட்டி அங்கேயே வாழுகின்ற பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அமராவதி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்களின் குருபாரம்பரிய வாசகங்களில் சில அடுத்த கட்டுரையாக உள்ளது.
3. இந்துவேதத்தில் பெண்கள் பற்றிக் கூறப்படும் மிக முக்கியமான சில கருத்துக்கள் ஒரு மின்னல் கீற்று போல் சிறு கட்டுரையாக குருதேவர் வழங்கியது மூன்றாவதாக உள்ளது.
4. இறுதிப் பக்கத்தில் அருளாட்சிக்கு அழைப்பு என்ற தலைப்பில் குருதேவர் தமது அருளுரையின் போது கூறிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
இந்த இதழை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.