இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > மடாதிபதிக் குழு - 1
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மடாதிபதிக் குழு - 1

பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவைச் செயல்படுத்தல்

"... மாற்று மதங்களோடு போரிடுவது நமது நோக்கமல்ல; இந்துக்களை இந்துமதத்தைப் புரிந்து கொள்ளும்படிச் செய்வதுதான் நமது நோக்கம்...."

  1. தமிழகம்தான் இந்துவேதமும், இந்துமதமும் பிறந்த இடம் என்பதை விளக்கி அறிமுகத்தார் ஒருவருக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் கட்டுரை இந்த இதழில் முதலாவதாக உள்ளது. நாயன்மார்களும், ஆழ்வார்களும், தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரியார், சங்கராச்சாரியார், இராமானுசர், இராகவேந்திரர் ... முதலிய அனைத்து அருளாளர்களும் தமிழர்களே! இவர்கள் அனைவரும் இறை அருளைப் பெற்றது தமிழ் மொழி மூலமாகவே! இவற்றை குருதேவர் இந்த அஞ்சலில் சுட்டிக்காட்டி உள்ளார்.
  2. பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவை ஒவ்வொரு கோயிலிலும் உள்ள ஒவ்வொரு கடவுளின் பெயரால் எப்படி உருவாக்குவது என்பதை விளக்கி அதனைச் செயல்படுத்துதல் எப்படி என்பதையும் காட்டி குருதேவர் அருளிய அருளாணை பெற்ற குருவாணைத் திருவோலை அடுத்ததாக உள்ளது.
  3. மடாதிபதிக் குழுவை உருவாக்கும் முறையை விளக்கி மற்றொரு மாணாக்கருக்கு குருதேவர் அருளிய அஞ்சல் வடிவக் கட்டுரை இந்த இதழில் மூன்றாவதாக உள்ளது.
  4. இறுதியாக உள்ள சிறு குறிப்பு 'தமிழர்களைத் தமிழர்கள் என்று உணரும்படிச் செய்யப் பாடுபடும் பண்பாட்டுப் புரட்சி நிறுவனமே" நமது நிறுவனம் என்ற குருதேவரின் விளக்கத்தைத் தருகின்றது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 

Last edited: November 14, 2024, 18:38
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |