இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > வேற்றுமத வெறியை மாற்றுவோம்!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

வேற்றுமத வெறியை மாற்றுவோம்!

இந்துமத நெறியைப் போற்றுவோம்! வேற்று மத வெறியை மாற்றுவோம்!

43,73,125ஆம் ஆண்டின் ஐப்பசி மாத வெளியீடு.

1)  இந்து முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினை குருதேவர் துவக்கி, அதற்கான விளக்கங்களை வழங்கி எழுதிய அஞ்சல் இந்த இதழில் முதலாவதாக உள்ளது. இதில் இந்து முன்னேற்றக் கழகம் என்பது இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சி பெற்ற நிலைதான் என்பதை விளக்கிடுகின்றார் குருதேவர்.

2) அடுத்ததாக இந்து முன்னேற்றக் கழகத்தின் செயல்திட்டமே இந்துவேத வாசகம்: 3339ஐ மக்களிடையில் விளக்கமாகப் பரப்புவதுதான் என்பதை விளக்கி குருதேவர் எழுதிய அஞ்சல் உள்ளது. இந்துமத நெறியை இந்துக்கள் போற்றினாலே போதும்; வேற்று மத வெறி தேவையேயில்லை என்பதை வெளிப்படையாக குருதேவர் இதில் விளக்கிடுகின்றார்.

3) குருதேவர் தமது பிறந்த நாள் அருட்செய்தியாக 57வது பிறந்த நாளில் விடுத்த கட்டுரை அடுத்ததாக உள்ளது. இதில் இந்துக்கள் இருக்குவேத வாசகங்களை யார் ஓத வேண்டும்? அசுர வேதம், யாம வேதம், அதர்வான வேதம் ஆகியனவற்றில் உள்ள வாசகங்களை யார்யார் ஓத வேண்டும்? என்பதனை விளக்கி இந்துமத ஒற்றுமையை உருவாக்குவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்டங்களை வழங்குகின்றார்.

4) காரைக்குடியில் அமைந்துள்ள அகத்தியர் அருட்கோட்டத்திற்கு என்னென்ன சிறப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பதனை விளக்கி குருதேவர் அந்த அருட்கோட்டத்தார்க்கு எழுதிய அஞ்சல் அடுத்து உள்ளது.

5) இறுதியாக குருதேவரே தமது பிறந்த நாள் பற்றி சுருக்கமாக விளக்கிய வாசகம் உள்ளது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 

 

Last edited: December 11, 2024, 18:35
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |