இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > அருளாட்சி செயல்விளக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அருளாட்சி செயல்விளக்கம்

அருளாட்சி செயல்விளக்கத் திருவோலைகள்
  1. முதலில் உள்ள அஞ்சல் வடிவக் கட்டுரை குருதேவரின் அருளுலகச் செயல்நிலைகளை மாணாக்கர்களுக்கு விளக்குகின்றன. கற்பனைகளை வென்று தமிழர் மதமான இந்துமதத்தின் விடுதலைக்கு உழைக்க அழைப்பு விடுக்கும் திருவோலை இது.
  2. அடுத்ததாக உள்ள திருவோலை இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வட்டார நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் போது எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியினை வழங்குகின்றது. இந்த உறுதிமொழியினை ஏற்றுத்தான் நிர்வாகக் குழுவினர் செயல்படத் துவங்க வேண்டும்.
  3. மூன்றாவதாக உள்ள கட்டுரை அருளாட்சி அமைப்புப் பணியில் ஈடுபடும் அனைவரும் அன்றாடம் பின்பற்ற வேண்டிய பூசைமுறைகளை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கிடுகின்றது.
  4. அடுத்து உள்ள மூன்று அஞ்சல்களும் குருதேவர் தனிப்பட்ட அடியான்களுக்கு எழுதியவற்றில் எல்லோருக்கும் பின்பற்ற வேண்டிய முக்கியமான அறிவுரைகள் உள்ளன.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |