இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > தமிழ்மொழி மதம்தான் இந்துமதம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

தமிழ்மொழி மதம்தான் இந்துமதம்

இந்துமதம் என்பது நமது தமிழ்மொழி மதம்தான்
  1. தமிழர்கள் தங்களுடைய தாய்மொழியில் அல்லாமல் பிறமொழிகளில்தான் பூசைகளைச் செய்கிறார்கள்; இப்படிப்பட்ட தமிழர்களை எப்படித் திருத்துவது? என்ற வினாவை எழுப்பி விடைகளை வழங்கியே குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக இருக்கின்றது.
  2. இந்துமதம் வேறு! ஹிந்துமதம் வேறு! என்பதை விளக்கி புதியவர் ஒருவருக்கு குருதேவர் விடுத்த அஞ்சல் அடுத்ததாக உள்ளது. மந்திரம், பேய், பிசாசு, சோதிடம் ... முதலியவற்றையே மதம் என்று எண்ணுவது தவறு என்பதை விளக்கி குருவழியாக அருளுலகத்தை உணருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார் குருதேவர்.
  3. இறுதிப் பக்கத்தில் நமது தமிழ்மொழியில் உள்ள இந்துமதத்தின் சிறப்பு என்ன என்பதை விளக்கிடும் குறிப்பு உள்ளது.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

Last edited: January 19, 2023, 19:26
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |