இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > இந்துக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி

இந்துக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி, வழித்துணை.
  1. "அருளுலகத்தாரின் சட்டம், விதி" - தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு, இந்துக்களுக்கு, உலக மக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் இருந்து தலைமை தாங்க வேண்டும் என்பதே பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் கூறுவது. அதாவது எந்தத் தனிமனிதரையும் வழிகாட்டியாகவோ, வழித்துணையாகவோ, தலைவராகவோ இந்துக்கள் ஏற்றுச் செயல்படக் கூடாது என்பதே இதன் சாரம். இதை விளக்குவதே இந்த அஞ்சல் வடிவக் கட்டுரை.
  2. "குருநிலை விளக்கத் திருவோலை" - குருதேவரின் நிலையை தமிழர்களுக்கு குருதேவரே விளக்கித்தான் அருள் வழங்க வேண்டிய நிலையில் தமிழினம் உள்ளது என்பதால் குருதேவர் தன்னிலையை விளக்கி மாணாக்கர்களுக்கு எழுதிய திருவோலை அடுத்ததாக உள்ளது.
  3. "அருள்வழங்கும் முறைகளும், அருள் பெறும் முறைகளும்" - குருதேவரிடம் எந்த விதத்தில் அணுகி அருள் பெற வேண்டும் என்பதை குருதேவர் விளக்கி எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை.
  4. "சமயக்குரவர் நால்வர் சன்னிதானத் திருத்தோற்ற எழுந்தருளி" - இந்தத் தலைப்பில் உள்ள நிலையினைப் பெற்றிட்ட அடியான் ஒருவருக்கு குருதேவர் விளக்கி எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை.
  5. "நாம் யாருக்கும் விரோதியில்லை; நமக்கு யாரும் விரோதியில்லை" - இயக்கம் என்பது சேருபவர்களும் விலகுபவர்களுமாக இருப்பதுதான். அதில் விலகுபவர்களை விரோதியாகப் பார்க்கக் கூடாது; நாமும் அவர்களுக்கு நம்மை விரோதியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதை விளக்குவதுடன்; பிற அறிவுரைகளையும் வழங்கி குருதேவர் எழுதிய அஞ்சல்.
  6. "அரசியல்வாதிகள் போட்டியிடுகின்ற தேர்தல் களத்தில் ஆன்மீக வாதிகள் ஏன் போட்டியிட வேண்டும்?" - இந்தக் கருத்தினை விளக்கி தேர்தல் களத்தில் குருதேவர் வழங்கிய அறிவிக்கை.
  7. "குருபாரம்பரிய வாசகங்கள்" - குருதேவர் வழங்கிய சில குருபாரம்பரிய வாசகங்கள்.

 

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட ====>>>

 

 

Last edited: October 28, 2022, 19:16
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |