இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > மனிதரைக் கடவுளாக்கும் மதம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

மனிதரைக் கடவுளாக்கும் மதம்

தமிழர் மதம்தான் மனிதர்களைத் தெய்வமாக்கக் கூடியது.
  1. பிற்காலச் சோழப்பேரரசின் வளர்ச்சிக் காலத்தில் சீவகாயந்திரி மந்திரச் சித்தியாளர்கள் வாழ்ந்த ஊரான அரியலூர் வட்டார காட்டூரைச் சேர்ந்த அடியான் ஒருவருக்காக குருதேவர் மிகவும் விளக்கங்கள் தந்து அருளாட்சி அமைப்புப் பணியை விவரித்து எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக உள்ளது.
  2. புள்ளம்பாடியைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவருக்கு தமிழர் மதத்தின் உயரிய நிலையை விளக்கி எழுதிய அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  3. விரகாலூரைச் சேர்ந்த கிறித்துவ வழியில் வளர்ந்து சித்தர் நெறியைப் பின்பற்றும் சித்தரடியான் ஒருவருக்கு சிவலிங்கச் சின்னத்தின் பொதுவான தன்மையை விவரித்து எழுதிய அஞ்சல் மூன்றாவதாக உள்ளது.
  4. பொதுமக்களுக்கு அருள் வழங்கிடும் அருட்பணியே அறப் பணி என்பதை விளக்கி பாளையங்கோட்டைச் சித்தரடியாள் ஒருவருக்கு குருதேவர் எழுதிய கடிதம் நான்காவதாக உள்ளது.
  5. இறுதியாக இந்துமதம் பற்றி பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி வழங்கிய குருபாரம்பரிய வாசகம் தரப்படுகின்றது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |