இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள் > ஞானத் திருவோலை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஞானத் திருவோலை

ஞானத் திருவிளக்க ஞானத் திருவோலை
  1. இந்த உலகில் யாராக இருந்தாலும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தே மனிதர்கள் வாழ வேண்டும் என்ற அருளுலகத் தத்துவத்தை விளக்கியே இந்த கட்டுரை அஞ்சல் குருதேவர் அவர்களால் தமது மாணாக்கர்களுக்கு எழுதப்பட்டுள்ளது.
  2. நான்வேத சித்தர் அருட்கோட்டம் என்று பெயரிடப்பட்டு சோழவந்தான் ஊருக்கு அருகே குருவித்துறை என்ற கிராமத்தில் அமைக்கப்பட உள்ள அருட்கோட்டத்திற்கான செயல்நிலைகளை விளக்கிடும் கட்டுரை அஞ்சல் அடுத்து உள்ளது.
  3. குருதேவர் அவர்கள் பாரம்பரியமாக ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழின மொழி மத விடுதலை இயக்கம் என்ற இயக்கத்தின் பொதுச் செயலாளருக்கு கருத்து விளக்கம் வழங்கி செயல்பட ஒப்புதல் அளித்து எழுதிய மடல் மூன்றாவதாக உள்ளது.
  4. சிறுமுகையைச் சேர்ந்த புதிய அறிமுகத்தார் ஒருவருக்கு குருதேவர் தமது கொள்கைகளையும், குறிக்கோள்களையும், செயல்படு நிலைகளையும் விளக்கி எழுதிய விரிவான அஞ்சல் நான்காவதாக உள்ளது. இதில் அனைத்து தரப்பினரிடமும் குருதேவரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பவை விளக்கமாக உள்ளன.
  5. அடுத்ததாக உள்ள இரு அஞ்சல்களும் கடந்தப்பட்டி அடியான்களுக்கும், கோவை சிறுமுகை அடியான்களுக்கும் தஞ்சைத் தாத்தா காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் அண்டபேரண்ட அருட்பேரரசராகத் திரும்பியுள்ளதை விவரித்து எழுதியவை.
  6. இறுதிப் பக்கத்தில் குருதேவர் மாணாக்கருக்கு எழுதிய அஞ்சலில் வழங்கிய குருபாரம்பரிய வாசகங்கள் சில உள்ளன.

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட --->>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |