(1) "அருளாட்சிப் போர்த் துவக்க அறிவிப்பு" - அருட்போர் கி.பி.1992இல் துவங்க இருந்தது. அதற்கு முன்பே 1988இலேயே துவங்கி விட்டது என்பதை அறிவித்த மடல்.
(2) "அருளுலகமே தடுமாறும் உகப்போர்" - அருட்போருக்கான வரலாற்றுப் பின்னணியை குருதேவர் விவரித்த மடல்.
(3) "அருட்போரில் பயன்படுத்த வேண்டிய மந்திறம்" - துணிச்சல் உள்ள அனைத்து அடியான், அடியாள், அடியார்களும் அருட்போரில் பயன்படுத்த வேண்டிய பூசைமொழியினையும், முறையையும் குருதேவர் வழங்கியுள்ள மடல்.
(4) "பயிற்சிப் பள்ளியில் வழங்கிய வணக்கவுரை" - பதினெண்சித்தர் மடம் நடத்தும் பயிற்சிப் பள்ளி நிகழ்ச்சிகளின் போது, இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் வழங்கிய வணக்கவுரை.
(5) "இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் வளவளர்ச்சிக்காக இந்துமதம் பற்றிய பேருண்மைகளில் சில" - குருதேவரின் தந்தையார் திரு ம.பழனிச்சாமி பிள்ளை அவர்கள் எழுதிய முன்னுரை.
(6) "அடியானுக்கு குருதேவர் வழங்கிய விளக்கங்கள்" - கடந்தப்பட்டிச் சித்தரடியான் ஒருவர் மூலம் அனைத்து அடியான்களுக்கும் குருதேவர் வழங்கிய கருத்துக்கள் அடங்கிய அஞ்சல்.
(7) "மீண்டும் அருளுலக அறிமுகம்" - குருதேவருடன் சிலகாலம் தொடர்பு இல்லாமல் போய்விட்ட விரகாலூர் சிவனடியார் ஒருவருக்கு மீண்டும் அருட்பட்டங்கள் வழங்கிக் குருதேவர் எழுதிய பதில் அஞ்சல் மடல்.
(8) "ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை" - குருதேவர் எழுதிய ஆங்கில புத்தாண்டிற்கான வாழ்த்துக் கவிதையினை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த இதழினை PDF கோப்பாக முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்.>>>
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.