இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > இந்துமத மீட்சி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துமத மீட்சி

"இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய வேண்டும்!"

மார்கழி 43,73,124

  1. இந்தியாவில் இந்துமதப் பேரரசை நிறுவ வேண்டுமென்றால், முதலில் இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் மீட்சி பெற்ற இந்துமதம் இந்தியாவை ஆள முடியும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு குருதேவர் எழுதிய அஞ்சல் கட்டுரை.
  2. இந்தியத் திருநாட்டில் இந்துமதம் என்று ஒரு மதமும், ஹிந்துமதம் என்று ஒரு மதமும் அனைவரும் கண்டு உணரக் கூடிய விதத்தில் தனித்தனியாக வாழ்ந்து வருவதை காணுங்கள் என்று ஆதாரங்களுடன் விளக்கி குருதேவர் எழுதிய கட்டுரை. இதனைப் புரிந்து கொன்டால்தான், இந்தியாவில் இந்த இரண்டு மதங்களில் எந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். இல்லையென்றால், அன்னிய ஆளுமைக்குட்பட்ட ஒரு ஆட்சியே இந்தியாவில் இந்துமதத்தின் பெயரால் அரைகுறையாக நடந்திடும். இதனை இந்தக் கட்டுரையில் மூலம் புரிந்து கொள்ளலாம்.
  3. கூடுவிட்டுக் கூடு பாயும் கலையை தமது அடியான் ஒருவருக்கு வழங்கி குருதேவர் எழுதிய அஞ்சல்.
  4. நம் காலத்தில் இந்துமதத்துக்காக நாம் எள் முனை அளவாவது பணி புரிய வேண்டும் என்பதனை வலியுறுத்தி குருதேவர் எழுதிய அஞ்சல் அடுத்து உள்ளது.
  5. பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வழங்கிய குருபாரம்பரிய வாசகங்களில் சில இந்த இதழின் இறுதிப் பகுதியில் உள்ளது.

இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

Last edited: January 07, 2024, 11:53
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |