இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > குருமாரியம்மன் அருள்வாக்குப் பணி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

குருமாரியம்மன் அருள்வாக்குப் பணி

அருளாட்சிக்காக குருமாரியம்மனின் அருள்வாக்குப் பணி

43,73,124ஆம் ஆண்டின் பங்குனி மாத வெளியீடு

  1. இந்துவேத முன்னேற்றக் கழகத்தின் (இ.மு.க.) முழக்கங்கள் என்ற தலைப்பில் இ.மு.க. நாட்டில் செயல்பட்டால் என்னென்ன செய்யப் பாடுபடும் என்பதை தெளிவாக விளக்கிடும் கட்டுரை. இது ஒரு நெடிய கட்டுரையின் சிறு பகுதியாக அமைந்திருந்தது.
  2. சுடலைப் பூசைமுறையும் அதன் பயன்களும் பற்றி குருதேவர் விரிவாக தமது மாணாக்கர்களுக்கு விளக்கி உரைத்த அஞ்சலின் நகல் அடுத்ததாக உள்ளது.
  3. அருளாட்சி அமைப்புப் பணிக்குத் தளபதிகளாகப் பொறுப்பேற்றுச் செயல்படும் அனைத்து சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார்களுக்கும் குருதேவர் வழங்கிடும் அறிவுரைகள் அடங்கிய அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  4. காரணோடைக் கருகுலத்தில் எழுந்தருளியிருக்கும் குருமாரியம்மனின் அருள்வாக்குப் பணியில் செயல்பட முன் வருவோர்களுக்கு அழைப்பு விடுத்தும், செய்முறைகளை விளக்கியும் குருதேவர் எழுதிய அஞ்சல் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  5. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரி ஆற்றங்கரைக் கருவூறார் அவர்கள் வழங்கும் செயல்விளக்க அருளாணை கட்டுரை அருளாட்சி அமைப்புப் பணி அறிவிக்கையாக அடுத்து உள்ளது.
  6. குருதேவரும் அவர் தம் மாணாக்கர்களும் செய்யும் பணிகளை தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் புரியும் வண்ணம் குருதேவர் விளக்கி எழுதிய அஞ்சல் கட்டுரை இறுதியாக உள்ளது.

இந்த இதழினை முழுமையாக PDF வடிவில் இங்கே படிக்கலாம் >>>>>

Last edited: June 02, 2023, 19:43
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |