இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > இந்துவேதமே சமுதாய ஒற்றுமையைத் தரும்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துவேதமே சமுதாய ஒற்றுமையைத் தரும்

இந்துவேதத்தின் மூலம்தான் சமுதாய ஒற்றுமையையும், சமத்துவத்தையும் உருவாக்க முடியும்!

"ஒரு நாட்டில் தோன்றிய மதம் அந்த நாட்டிற்குள் மட்டுமே வாழ வேண்டும்" - இந்துவேத மதத்தின் கொள்கை,குறிக்கோள்.

  1. தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு குருதேவர் ஞானாச்சாரியார் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் விடுத்த அறிவிப்பு அழைப்பு வேண்டுகோள் அஞ்சல் முதலாவதாக உள்ளது. இதிலேயே இந்துமதத்துக்கு ஆபத்து வந்தபின் செயல்படுவதை விட இந்துமதத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதபடி தற்காப்புப் பணி செய்வதே சிறந்தது என்பதை விளக்கிடுகிறார் குருதேவர்.
  2. இந்துவேத மாநாட்டினை நடத்துவதற்கான அருளாணை பெற்ற குருவாணையை குருதேவர் தமது மாணாக்கர்களுக்கு விடுத்த விரிவான அஞ்சல் அடுத்ததாக உள்ளது. இந்துவேதத்தின் மூலம்தான் சாதிமத வேறுபாடற்ற சமுதாய ஒற்றுமையையும், சமத்துவத்தையும் உருவாக்க முடியும் என்ற குருபாரம்பரிய வாசகத்தினை வழங்கி குருதேவர் அனைத்து மாணாக்கர்களுக்கு எழுதிய செயல்திட்டங்களை வழங்கும் அஞ்சலே இது.
  3. இறுதிப் பக்கத்தில் பிறமண் அருளிய இந்துவேதம் கூறும் கருத்தான 'ஒரு நாட்டு மதத்தினை மற்ற நாடுகளில் பரப்பக் கூடாது' என்பதை வழங்கிடும் வாசகம் உள்ளது.

 

இந்த இதழினை PDF வடிவில் முழுதாகப் படித்திட ====>>>>

Last edited: November 03, 2023, 23:13
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |