இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள் > நாட்டை தத்துவமே ஆள வேண்டும்!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

நாட்டை தத்துவமே ஆள வேண்டும்!

 

நாட்டை யார் ஆளுகிறார்கள் என்பதை விட எந்தத் தத்துவம் ஆளுகின்றது என்பதே முக்கியம்!

43,73,124ஆம் ஆண்டு தை மாத வெளியீடு

  1. திருவையாறு வட்டாரத்தைச் சேர்ந்த புலவர் ஒருவருக்கு குருதேவர் தமது தலைமைப்பீடத்திலிருந்து எழுதிய நெடிய விளக்க அஞ்சல் முதலாவதாக உள்ளது. அருட்போருக்கு குருதேவரின் கருத்துக்களே போர் ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள்; குருதேவரின் செயல்திட்டங்களே படை அணிவகுப்பு முறைகள், வியூகங்கள். இவற்றைப் புரிந்து அருட்படை தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை விவரிக்கின்றார் குருதேவர்.
  2. உயிர்ப்புச் செய்யப்பட்ட கோயிலுக்கான பூசைமுறைகளை விவரித்து குருதேவர் அவர்கள் விரகாலூர் வட்டாரத்தாருக்கு எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்ததாக உள்ளது. சித்தர் நெறிப்படி பெண்களையே அனைத்து வகையான துறைகளுக்கும் தலைவியாக நியமிக்கப் பட்டுள்ளனர் என்பதால் அனைவரும் பெண்களுக்கு அருளுலகில் உயர்வு என்றும் உண்டு என்பதையும்; அருளாட்சி அமைப்புப் பணிகளில் பெண்களும் தலைமை ஏற்றுப் பெரும்பணிகளைச் செயலாக்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி குருதேவர் இந்தக் கட்டுரையில் எழுதியுள்ளார்.
  3. இறுதிப் பக்கத்தில் இருக்கும் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வழங்கிய குருவாசகம் தமிழகத்தின் இன்றைய நிலையையும், இனிமேல் வரப்போகும் சூழ்நிலைகளையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது.

இந்த வெளியீட்டினை முழுமையாகப் படித்திட --->>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |